July 30, 2021 at 03:21PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 டெங்கு நோயாளர்களுள் 70 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 16,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர் களுள் 70 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர் களாகவுள்ளனர். நிலவும் தென்மேற்கு பருவ மழையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் டெங்கு ஆகிய நோய்களின் ஆரம்பக் கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என தொற்று நோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.