இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இலங்கை போராடி வெற்றி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இலங்கை போராடி வெற்றி.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. 

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட க்ரூணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த சீனியர் வீரர்கள் அனைவரும் நடப்பு டி.20 தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டதால், இந்திய அணி அதிகமான இளம் வீரர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

 மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஷிகர் தவான் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் தேவ்தட் படிக்கல்லை (29) தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அகிலா தனன்ஞனயா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.