July 27, 2021 at 08:19PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்றைய மருத்துவ குறிப்பு.


இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள். 

👉ஓமம் : ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம். 

👉சீரகம் : ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

👉பார்லி : ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை இரவு முழுவதும் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும். 

👉கொத்தமல்லி விதை : ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம். 

👉வெந்தயம் : வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம். 

👉அருகம்புல் : ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். 

👉உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இதனால் உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். அனைவருக்கும் பகிருங்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.