இன்றைய மருத்துவ குறிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்றைய மருத்துவ குறிப்பு. 


தேயும் எலும்புகளும் அதற்கான தீர்வுகளும். உடலுக்கு வடிவத்தையும் வலுவையும் தருவது எலும்புகள். கொலாஜென் இழைகள் மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றின் உப்புகளால் ஆனவை. எலும்புகள் இயல்பில் கடின தன்மையைத்தான் பெற்றுள்ளன. ஆனால் எலும்பு தேய்வு நோயில் எலும்புகள் தேய்ந்து பஞ்சைப் போன்று மென்மையாக மாறுகின்றன. இந்த நோயை, மருத்துவ உலகம் ஆஸ்டியோ போரோசிஸ் என்று அழைக்கின்றது. எலும்புத் தேய்வு நோய் பிற நோய்களைப் போல அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை. எனவேதான் இதை உடனடியாக கண்டறிய முடிவதில்லை. எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து எந்த விதமான அறிகுறிகளையும் காட்டாது குறைந்துவிடுகின்றது. இயல்பில் எலும்புகள் புதிதாக தோன்றும் பண்பைப் பெற்றுள்ளன. பழைய எலும்புகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புது எலும்புகள் உருவாவது நம்முடைய உடலில் தொடர்ந்து நடைபெறுகின்றது. உடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை எலும்புகள் தொடர்ந்து வளர்ந்திட உதவுகின்றன. எலும்பு தேய்வு நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு சில அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அடி முதுகுவலி, லேசாக தவறி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறியாக வெளிப்படும். எலும்புத் தேய்வை எக்ஸ்ரேக்கள் மற்றும் ஆஸ்டியோ சி.டி. மூலமாக கண்டறியலாம். ஆஸ்டியோ கம்யூட்டரைஸ்டு மெமோகிராபி என்பது எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தின் அளவை கண்டறியும் கருவியாகும். எலும்பு தேய்வு நோயை குணமாக்க இயலாது. எனினும் இந்த நோயை வராமல் தடுக்கலாம். எலும்பு தேய்வு நோய் ஏற்பட்டோருக்கு மேலும் பரவாமல் தடுக்க அலோபதி மருத்துவம் உதவுகின்றது. எலும்பு தேய்வு நோய் மரபு ரீதியாக வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்கலாம். எலும்புகள் எலும்பரிப்பு ஏற்படுவதால் பலகீனமாக இருக்கும்போது பலமாக இருமினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது . இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாத விலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம், அடைந்திருப்பதும் முக்கிய காரணம். பொதுவாகச் சொல்வதானால் இந்நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக்கும் வருகிறது. எலும்புகள் கல் போன்று உறுதியானது என்று நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் எலும்பு மென்மைப்பட்டு, வலுக்குறைத்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது. இது போன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது. எலும்பரிப்பு நோயைத் தடுக்கும் முறைகள்: எலும்பரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போது கூட எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்புமுறிவுக்கு காரணமாகி விடுகிறது. நடைபயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும். உணவில் கால்சியம், வைட்டமின்-ஈ சரியான அளவில் இருக்கவேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களும், நீண்டநாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பெண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.எலும்பரிப்பு நோய்க்கு Calcarea Carb, Arnica, Platina போன்ற ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. எலும்பரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படலாம். எக்ஸ்ரே கூட நோய் முற்றிய நிலையில் தான் நோய்ப்பற்றி கூறுகிறது. B.M.T சோதனைகள், எலும்புகளில் உள்ள தாது உப்புக்கள், எலும்பின் எடைபற்றி துல்லியமாக அறிவிக்கிறது. ஒருமுறை எலும்பரிப்பு நோய் வந்து விட்டால் மேற்கொண்டு நோய் தீவிரமடையாமலும் மருந்துகளால் காக்க இயலும். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.