இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீத மாணவர்கள் போதைக்கு அடிமை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீத மாணவர்கள் போதைக்கு அடிமை.

இரத்தினபுரி மாவட்டக் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள், போதைப்பொருள்களுக்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதென, இரத்தினபுரி மாவட்டத்தின் புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் கே.தியாகேஸ்வரன் தெரிவித்தார். 

எனவே, பிள்ளைகள் சமயக் கல்வி கற்பதற்கு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். அப்போதே அவர்களை போதைப்பொருளிலிருந்து மீட்டெடுக்கலாம் என அவர் தெரிவித்தார். மேலதிக வகுப்புகளுக்காகச் செல்லும் பிள்ளைகள், போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை அதிகமாக உள்ளதால், இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

 ஞாயிற்றுக்கிழமைகளில், அறநெறி வகுப்புகளுக்கு மாணவர்களைத் தவறாது அனுப்பி வைத்தல் வேண்டும். இத்தினங்களில் மாணவர்களை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.