கண்டியில் ஒரே தடவையில் இரண்டு மொடர்னா கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய பெண்ணுக்கு என்ன நடந்தது.?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


கண்டியில் ஒரே தடவையில் இரண்டு மொடர்னா கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய பெண்ணுக்கு என்ன நடந்தது.? 

கண்டி − பேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரு தடவைகள் மொடர்னா கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடபேராதனை கொரோனா தடுப்பூசி நிலையத்தில், இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. பேராதனை ஒகஸ்டாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே, ஒரே நாளில் இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர், பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.