பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை ஏற்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் ஆணைக்குழு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. மூன்றுமாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

 தற்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமலே தடுப்புக்காவல் உத்தரவை நீடிப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு செயலாளருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று மாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விசேட பாதுகாப்புடன் அவர்களின் வீடுகள் அல்லது அவர்களின் பகுதிகளிற்குள் தடுத்துவைக்கும் விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.