திருமண நிகழ்வுகளில் சர்ச்சை – வரும் தினங்களில் திருமணங்களை நடத்த தடை விதிக்கும் சாத்தியமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

திருமண நிகழ்வுகளில் சர்ச்சை – வரும் தினங்களில் திருமணங்களை நடத்த தடை விதிக்கும் சாத்தியமா?


தனிமைப்படுத்தல் மற்றும் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வுகள் நடத்தப்படும் பட்சத்தில், நாளைய தினம் முதல் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார். 

திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, திருமண நிகழ்வுகளை நடத்தும் விதம் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 p இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் தொடர்பில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், பெரும்பாலான நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளை மீறி இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், நாளைய தினம் முதல் நடத்தப்படும் அனைத்து திருமண நிகழ்வுகள் குறித்தும் தாம் அவதானம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

 சுகாதார வழிமுறைகளை மீறி நடத்தப்படும் திருமண நிகழவுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி திருமண நிகழ்வுகளை நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இவ்வாறான விதத்தில் திருமண நிகழ்வுகள் நடத்தப்படும் பட்சத்தில், பல்வேறு கொவிட் திருமண கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உபுல் ரோஹண தெரிவிக்கின்றார். இந்த நிலைமை தொடருமாக இருந்தால், திருமண நிகழ்வுகளை நடத்த எதிர்காலத்தில் தடை விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.