பால்மா இறக்குமதிகளை நிறுத்த நடவடிக்கை?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பால்மா இறக்குமதிகளை நிறுத்த நடவடிக்கை? 


இலங்கையில் 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய தெரிவித்துள்ளார். 

அதன்படி ,நாட்டின் வணிக வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பால்மா விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். 

உலக சந்தையில் பால்மா வகைகளின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி என்பன காரணமாக பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும் , அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.