சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல்...

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன்படி ,சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் அவமானம் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்ய மூன்றில் ஒருபகுதியினர் முன்வருவதில்லை என குறிப்பிட்டார். 

யூடியூப், வைபர், வாட்ஸ்அப், ஐஎம்ஓ, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக வலைத் தளங்கள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூகத்தில் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.