கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை 


கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க் குமாறு குடும்ப சுகாதார பணியகம் சுகாதார அமைச்சுக் குக் கோரிக்கை விடுத்துள்ளது.

 இதுவரை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோபாம் தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரதிப் பணிப்பாளர் சித்திர மாலி டி சில்வா தெரிவித்துள்ளார். 

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 13 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்து 250 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாய்மார்களில் 175 பேர் மாத் திரம் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் சித்திர மாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.