3ஆவது டோஸ் அவசியமில்லை - உலக சுகாதார அமைப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 3ஆவது டோஸ் அவசியமில்லை - உலக சுகாதார அமைப்பு. 


3வது டோஸ் கொவிட் தடுப்பூசி இப்போது அவசியம் இல்லையெனத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தற்போதிருக்கும் கொவிட் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதன்படி ,அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தமது 3 ஆவது டோஸ் கொவிட் தடுப்பூசிக்கு அங்கிகாரம் கோரி விண்ணப்பித்து உள்ளன. 

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு போதிய அறிவியல்பூர்வ ஆதாரமும் தரவுகளும் இல்லை. 

அதற்குப் பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். உலகளவில் கொவிட் இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில் டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார். மேலும் ,உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மைக்கேல் ரியான் கூறுகையில் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்காமல் 3 ஆவது டோஸாக செலுத்த முடிவு செய்யுமானால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். 

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.