பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை...
பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை...
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இன்று (04) தெரிவித்துள்ளார்.
இதன்படி ,கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
அந்நிலையில் , இவற்றை மீளத் திறப்பது குறித்து கல்வி அமைச்சு சுகாதாரத் தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. அது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இதுவரையில் இவற்றைத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ,பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்தும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும், இதன்பின்னர் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.