கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்களுக்கே அதிகளவு நட்டம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்களுக்கே அதிகளவு நட்டம். 

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சார சபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்தக் காலப்பகுதிகளில் அதிகளவான இழப்புகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கே ஏற்பட்டுள்ளது எனவும், குறித்த கூட்டுத்தாபனத்துக்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 அதேவேளை , ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. மேலும் ,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்கள் அதிகளவு நட்டம் அடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.