பொம்மை வடிவில் வந்த உயிர் ஆபத்து.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


பொம்மை வடிவில் வந்த உயிர் ஆபத்து.

பாகிஸ்தானில் பொம்மை வடிவில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் சிலர் தங்களது வீடு அருகே விளையாடி கொண்டிருந்தபோது பொம்மை போன்ற பொருள் ஒன்று வீட்டினருகே கிடந்துள்ளது. 

அதனை அந்த குழந்தைகள் எடுத்து விளையாடிய நிலையில் பொம்மை வடிவில் இருந்த வெடிகுண்டு திடீரன வெடித்து சிதறியுள்ளது. மேலும் ,இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் பலியானார்கள்.அவர்கள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். எனினும் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.