சாரதியால் யுவதி துஷ்பிரயோகம்...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சாரதியால் யுவதி துஷ்பிரயோகம்...
ஹொரவப்பொத்தான பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி ,குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரால் குறித்த யுவதி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறினார். அதனையடுத்து , ஹெரவபொத்தான பொலிஸரால் கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ,இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு சேவை வழங்கும் இவ்வாற துறைகளை சேர்ந்தவர்கள் அதற்கு முரண்பாடக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, அவர் சுட்டிக்காட்டினார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.