நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் அடுத்த மாதமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் அடுத்த மாதமா?

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் தினம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. 

அதன்படி , கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இதன்போது கலந்துரையாடி தீர்மானிக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

மேலும் ,எரிபொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.