ஜேர்மனியில் கத்திக்குத்து சம்பவம் மூவர் பலி – ஐவர் ஆபத்தான நிலையில்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஜேர்மனியில் கத்திக்குத்து சம்பவம் மூவர் பலி – ஐவர் ஆபத்தான நிலையில் 


ஜேர்மனியின் Wuerzburg நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். 

நீண்ட கத்தியை பயன்படுத்தி நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்,பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு அவரை காயப்படுத்தி கைதுசெய்துள்ளனர். 

மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஐவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் கடுமையாக காயமடைந்தவர்கள் உயிர் தப்புவார்கள் என உறுதியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். 

தனியொரு நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நகரின் மத்தியில் உள்ள பார்பரோசா சதுக்கத்தில் கத்தியுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கத்தியுடன் நபர் ஒருவரை பொலிஸார் அழைத்து செல்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளன.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.