இன்று முதல் பாராளுமன்றத்தில் அமரும் ரணில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இன்று முதல் பாராளுமன்றத்தில் அமரும் ரணில்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். 

இதன்படி ,பாராளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், ரணில் விக்ரமசிங்க சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது. அந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்திருந்தது. 

எனினும், கடந்த 10 மாதங்களாக அந்த பதவிக்கு கட்சி சார்பில் எவரும் பெயரிடப்படாத நிலையில், கட்சியின் செயற்குழுவினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. 

மேலும் ,இதன் பிரகாரம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.