எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.


தீ விபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் கப்பலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்ட நட்டத்தை முன்வைக்கும் கால எல்லை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 reformsShmoj.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 0112 44 54 47 என்ற தொலை நகல் இலக்கத்தின் ஊடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும், அனர்த்தத்திற்கு உள்ளான துறைகளுக்கும் உயர்ந்தபட்ச இழப்பீட்டை வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து உப குழுக்களினதும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிபுணர்கள் நாட்டில் இல்லாததனால் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட கப்பல் கம்பெனியிடமிருந்து கூறப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையின் முதலாவது தொகுதி வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும். படகு, வலை போன்ற உபகரணங்களுக்காக இழப்பீடு வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.