முச்சக்கர வண்டிக் கட்டணம் கி.மீ/50 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


முச்சக்கர வண்டிக் கட்டணம் கி.மீ/50 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம.

எரிபொருள் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி பயணத்துக்கு ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.40 முதல் 45 வரையே ஒரு கிலோமீற்றருக்கு அறவிடுகிறார்கள். 

எரிபொருள் விலையில் ஒரு முறை அதிகரிப்பை இனி தாங்க முடியாது என அவர் தெரிவித்தார். முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு தற்போதைய அரசு எந்தவித சலுகையும் வழங்கவில்லை என்றும் எனவே கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டினார். 

எரிபொருள் விலை அதிகரிப்பால் வேறு பல சிக்கல்களும் எழுந்துள்ளன. முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார். ...✍️...✍️...✍️...✍️...✍️
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.