சைக்கிள் மற்றும் மாட்டு வண்டில்களில் நாடாளுமன்றம் சென்ற எதிர் கட்சியினர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 சைக்கிள் மற்றும் மாட்டு வண்டில்களில் நாடாளுமன்றம் சென்ற எதிர் கட்சியினர். 




நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு சென்றுள்ளனர்.

 எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் பல்வேறு பதாகைகள் மற்றும் கோஷங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் எரிபொருள் விலையேற்றப்பட்டதனை கண்டித்து அப்போதைய எதிர்க்கட்சியினரான தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் நாடாளுமன்றம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.