பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை. 


நாளை அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம் அந்த சங்கம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டை நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை கவலை அளிப்பதாக அந்த சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளொன்றுக்கு சுமார் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அத்துடன், நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் சராசரியாக 50ஆக உள்ளது. எனவே, இப்படியான நிலைமையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றமையானது கவலை அளிப்பதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.