தென் ஆபிரிக்க பெண் 10 குழந்தைகளை பிரசவித்தமை தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 தென் ஆபிரிக்க பெண் 10 குழந்தைகளை பிரசவித்தமை தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை..! 

தென் ஆபிரிக்காவில் கோஷியம் சீதோல் (37) என்ற பெண் ஒருவர் ஒரே தடவையில் 10 குழந்தைகளை பிரசவித்ததாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சர்வதேச பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த குழந்தை பிரசவம் தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 குழந்தைகளை பிரசவித்த பெண் இதுவரையில் தனது குழந்தைகளை வெளி உலகுக்கு காண்பிக்கவில்லை என்று குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற குழந்தை பிரசவங்கள் பதிவாகவில்லை என தென்ஆபிரிக்க கவுடெங்க மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்க பெண்ணொருவர் 7 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக கடந்த வாரம் தென் ஆபிரிக்க ஊடகங்கள் உட்பட மேலும் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 எனினும், இவ்வாறான செய்திகள் மாத்திரமே பகிரப்படுவதாகவும், தாம் இதுவரை அக்குழந்தைகளின் புகைப்படத்தையாவது பார்த்திருக்கவில்லை என்றும் குறித்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தமது வைத்தியசாலையில் எந்தவொரு பெண்ணும் 10 குழந்தைகளை பிரசவிக்கவில்லை என மேற்படி பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார். எனினும், அப்பெண்ணின் காதலனது சகோதரி கூறுகையில், உலகளாவிய ரீதியில் கொவிட் பரவிவரும் சந்தர்ப்பத்தில் தனது சகோரனுக்கு இவ்வாரானது வரப்பிரசாதம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தமது பண்பாட்டு முறைகளுக்கமைய, கர்ப்பிணியையும், குழந்தைகளையும் மிகவும் மென்மையாக கவனித்துகொள்ளப்படுவர் என்றும், அவசியமான நேரத்தில் குழந்தைகள் வெளி உலகத்துக்கு காண்பிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார். அதற்கமைய, உரிய திகதிக்கு முன்னதாக இக்குழந்தைகள் பிறந்ததால், அவற்றுக்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.