கிளிநொச்சியில் குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கிளிநொச்சியில் குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு. 


கிளிநொச்சி புதுஐயங்கன் குளத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார். கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புதுஐயங்கன் குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று முன் தினம் காணாமல் போயிருந்தார். 

இந்த நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன் தினம் பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன்போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலிலுள்ள மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றும் தேடுதல் இடம்பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த நபர் பொன்னகர் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்துலிங்கம் அருமைநாதன் என பொலிஸார் தெரிவித்தனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.