கட்டிடத் தொழிலாளி தவறி வீழ்ந்து உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 கட்டிடத் தொழிலாளி தவறி வீழ்ந்து உயிரிழப்பு. 

கட்டட வேலையில் ஈடுபட்டபோது, மேல்தளத் திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நீர்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், நாயனமார் கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

 “வீட்டுக் கட்டிடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள் ளார். உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. இறப்பு விசாரணையை நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம குமார் மேற்கொண்டார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.