இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை.

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 945 ரூபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. 

இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கமைய பால்மா விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,295 ரூபாவாக உயர்வடையும். எவ்வாறாயினும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பால்மா விலைகளை அதிகரிக்கபோவதில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையேற்றம் தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யுமாறு குறித்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ Yarlosai
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.