June 16, 2021 at 11:04AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கோழி இறைச்சி, முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு? கோழிகளுக்கான உணவுப் பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனைத்து இலங்கை கோழி வர்த்தகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி ,சோள இறக்குமதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு சோளம் ஒரு கிலோகிராமின் விலை 95 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கின்றார். அதனால் , கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கோழிகளுக்கான உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோதுமை இறக்குமதிக்கான அனுமதி பாரியளவு உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். மேலும் ,இதனூடாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கின்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.