சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

 சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு



கடந்த வருடம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற LPL கிரிக்கெட் தொடரில், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.


சட்டத்தரணி நுவன் பெலிகஹவத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை, பூரணப்படுத்தப்படாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், அதனை முழுமைப்படுத்தி சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விளையாட்டுத்துறையில் குற்றங்களைத் தடுக்கும் விசேட பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.