ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்.

 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்.



ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் ஈசான் மானி கூறுகையில், ‘ஆசிய கிண்ண தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இம்முறை ஜூன் மாதம் லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

அதேநேரம் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஆசிய கிண்ண தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனால் அட்டவணையில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஆசிய கிண்ணம் நடத்தப்பட மாட்டாது என்றே தெரிகிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.