கொழும்பு − டாம் வீதி சடலம். கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்.

 கொழும்பு − டாம் வீதி சடலம். கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்.


கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் மற்றும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தினபுரி − குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஹங்வெல்ல பகுதியிலுள்ள வாடி வீடொன்றிற்கு பெண்ணொருவருடன் கடந்த 28ம் திகதி செல்லும் குறித்த சந்தேகநபர், மார்ச் 01ம் திகதி சந்தேகநபர் மாத்திரம் பயணப் பையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறுயுள்ளதாகவும் விசாரணைகள் கண்டறியப்பட்டுள்ளது.

CCTV ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே சம்பவம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பு − டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 1ம் திகதி பயணப் பையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஹங்வெல்ல பகுதியிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே இந்த சடலத்தை சந்தேகநபர் கொண்டு வந்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, சந்தேகநபர் தொடர்பான தகவல்களையும் பொலிஸார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.