சவுதியிலிருந்து 2,400 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

 சவுதியிலிருந்து 2,400 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.


இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரையிலான காலப்பகுதியில் சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ள 2,400 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும் 1,800 பேர் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அந்நாட்டு இலங்கைக்கான தூதுவர் மதுக்க விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் அவசர வைத்திய சிகிச்சை பெற வேண்டியுள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கவிருப்பதாகவும், நோய்வாய்ப்பட்டுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் வரையில் தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கு தூதுவராலயம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த இலங்கையர்கள் சிலருக்கு மீண்டும் வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.