அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சை நடைபெறும்...

அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சை நடைபெறும்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடவிதானங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து இணையத்தளமூடாகவும் வலயக் கல்வி அதிகாரிகளிடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இதன்படி குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

மேலும் ,இதனடிப்படையில், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.