உயர் தரப் பரீட்சைப் பெறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

உயர் தரப் பரீட்சைப் பெறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை நடைபெற்று 33 நாட்களில் வெளியிட முடிந்தது.

இந்த நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அதிகாரிகள், விடைத்தாள் மதிப்பீடு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாண மாணவியர் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் பல்கலைக்கழக கற்கைகளை தொடர்வதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் பெறுமதியான காலம் இவ்வாறு வீணாவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரமமாக பெறுபேறுகளை துரித கதியில் வெளியிட்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.