வரவு பதிவுசெய்யும் கருவி மூலம்கொரோனா பரவும் என அச்சம்! அரச உத்தியோகத்தர்கள் கவலை.
வரவு பதிவுசெய்யும் கருவி மூலம்கொரோனா பரவும் என அச்சம்! அரச உத்தியோகத்தர்கள் கவலை.
யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில் இவ்வாறான கைவிரல் அடையாளம் பதிவுசெய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது எனவும்,
அவர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
‘கடந்த யுத்த காலத்தில்கூட எந்தவித அச்சமும் இன்றி நாம் பணியாற்றினோம். அப்போது வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை ,
9.00 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர். இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது’ எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.