ஐ.பி.எல் தொடரில் புதிய அணியை வாங்குகிறார் பிரபல நடிகர் மோகன்லால்? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஐ.பி.எல் தொடரில் புதிய அணியை வாங்குகிறார் பிரபல நடிகர் மோகன்லால்? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடருக்கான அடுத்த ஆண்டில், புதிததாக ஒரு அணி வரவுள்ளதாகவும், அந்தணியை பிரபல நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த ஆண்டிற்கான ஏலத்தில் யார்? யாரை எடுக்கலாம் என்று இப்போதே தீவிரமாக திட்டம் தீட்டி வருகின்றன.

இந்நிலையில், அடுத்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு அணி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின் படி புதிதாக வர இருக்கும் இந்த அணியை மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் தான் வாங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த புதிய அணி அகமதாபாத் அல்லது குஜராத்தை சார்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.