சாரதி அனுமதிப்பத்திரம் - சலுகைக் காலம் நீட்டிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் - சலுகைக் காலம் நீட்டிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக, மேலும் 3 மாதங்கள் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தாலும் பிரதேச செயலகம் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை உள்ளிட்ட சேவை வசதிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.