2021 Budget - பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை

2021 Budget - பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை


ஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதனை தடை செய்யுமாறு முன்மொழிந்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாசித்து நிறைவு செய்தவுடன், பாராளுமன்றம் நாளை (18) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.